Wednesday, July 22, 2009

நானே உருகுகிறேன்

நிலவொளியில்
பாலை தயிர் செய்து,
வெள்ளி மத்தில் கடைந்து,
திரண்ட வெண்ணையில்,
மணக்கும் மல்லிகை
மலர்ச்சாறு இட்டு
செய்த அழகு பதுமையே,
உன் அழகில் -
நானே உருகுகிறேன்
உன் நினைவோ -
மனதில் உறைகின்றது