நீ நடக்கையில்,
உன் ஒவ்வொரு அடிக்குமே -
என் மனசு
தாளம் போடுகிறது
ஓடி வந்து
என்னை கட்டி அணைத்துகொள்...
என் இதயமும்
இன்பத்தில்,
வேகமாய் துடித்து
நின்று போகட்டும்...
அஃது மோட்சம் கிடைக்கட்டும்
Wednesday, September 29, 2010
Wednesday, September 22, 2010
ஒரு நாள் ஒரு பொழுது
கண் இமைகளில்
மெல்லிய முத்தம்
தந்து, தலைக்கோதி,
துயில் எழுப்பினாள்
இதமான விரல்களினால்
கன்னம் வருடினாள்,
உள்ளங்கை கதகதப்பில்
பொழுது புலர்ந்தது
முற்றத்தில்,
தேகத் திரை நீக்கி நிக்க,
மேகத் திரை விலக்கி
அதிகாலை சூரியன் தன்
செந்தூர கரங்கள் நீட்டி
தேகம் தீண்டியது,
அகம் அலர்ந்தது
பூமி விரித்த
மரகத கம்பளத்தில்
பூத்திருந்த காலை பனி
காலை நனைத்தது,
மெல்லிய காற்று
என்மேல் வீச
அங்கம் எல்லாம் குளிர,
அந்நாளின் முதல் உபசரிப்பு
இனிமையாய் அமைந்தது...
...
உள்ளத்தில் இனிப்பவள் -
இறைவன் தீட்டியதில்
எழில்மிகு ஓவியம்
வண்ணம் கொண்டு வர
ஈரம் காயாத நெற்றியில்
குங்குமம் இட்டேன்
மெல்லிய முத்தம்
தந்து, தலைக்கோதி,
துயில் எழுப்பினாள்
இதமான விரல்களினால்
கன்னம் வருடினாள்,
உள்ளங்கை கதகதப்பில்
பொழுது புலர்ந்தது
முற்றத்தில்,
தேகத் திரை நீக்கி நிக்க,
மேகத் திரை விலக்கி
அதிகாலை சூரியன் தன்
செந்தூர கரங்கள் நீட்டி
தேகம் தீண்டியது,
அகம் அலர்ந்தது
பூமி விரித்த
மரகத கம்பளத்தில்
பூத்திருந்த காலை பனி
காலை நனைத்தது,
மெல்லிய காற்று
என்மேல் வீச
அங்கம் எல்லாம் குளிர,
அந்நாளின் முதல் உபசரிப்பு
இனிமையாய் அமைந்தது...
...
உள்ளத்தில் இனிப்பவள் -
இறைவன் தீட்டியதில்
எழில்மிகு ஓவியம்
வண்ணம் கொண்டு வர
ஈரம் காயாத நெற்றியில்
குங்குமம் இட்டேன்
Subscribe to:
Comments (Atom)