Sunday, April 12, 2026

நீ அறிவாயா ?

இரவு பணியில்

மடி கணிணி ஒளியில் 

உன் முகமும் ஒளிர...

முழு மதியும் வான் விட்டு 

அறைக்குள் வந்ததை 

நீ அறிவாயா ?


கரு மேகம் குழலில் 

பஞ்சமி பிறையென சூடிய 

வெண் மல்லிகை வாசத்தில்

என் மோகம் உன் வசத்தில் 

தஞ்சம் புகுந்ததை

நீ அறிவாயா ?


குறுநகை புரிந்து

நீ தலை குனிந்து 

நானத்தில் செந்தேன் சிந்த

நான் அதில் நனைந்தேன் என்று 

நீ அறிவாயா ?


மெல்லிடையாளே,

தரை பட்டும் படாமல் நடக்கையில்

உன் மென் பட்டு தாள் கொலுசுடன்

என் மனமும் மெல்லிசை தாளமிடுவதை

நீ அறிவாயா ?

Saturday, March 14, 2026

திருமலை வேங்கடகிரி சீனிவாசா


நாகாச்சல
வைகுந்தபுரி வேங்கட கிரிவாசா 
கோவிந்தா நமோ நம

திருபதிவாழ் பத்மாவதி மனோஹர சீனிவாசா 
கோவிந்தா நமோ நம

ஏழுமலைசூழ் எழுந்தருள் திருமலைவாசா 
கோவிந்தா நமோ நம

நவநிதியருள் பெருமாள் திருபதிவாசா 
கோவிந்தா நமோ நம

ஆதிமூலம் பூவராஹர் உடனுறை வெங்கடேசா 
கோவிந்தா நமோ நம

திருமகள் நிலமகள் பாதகமலம் நித்யவாசா 
கோவிந்தா நமோ நம

பக்தமனமாழ் நெடுமால்  வேதம்புகழ் கீர்த்திவாசா 
கோவிந்தா நமோ நம

அமரர் சித்தர் ஆழவார் நித்தம் பூசிக்கும் ஈசா 
கோவிந்தா நமோ நம

நித்யானந்தா புருஷோத்தமா அச்சுத்தா அநந்தா 
கோவிந்தா நமோ நம

சிறிய திருவடி பெரிய திருவடி ஆட்கொண்ட நாதா 
கோவிந்தா நமோ நம

Tuesday, March 3, 2026

கிரியே கிளியே

  1. அருண கிரியே அருமை கிளியே
    அமுத மொழியே திருப் புகழே

  2. கருணைக் கடலே கந்த வேலே
    குமர குருவே முருகப் பெருமாளே

  3. சக்தி மகனே ஆறு முகனே
    சேனா பதியே சேவல் கொடியே

  4. அமரர் மீளவே வீரம் சிறந்தே
    சமரம் செய்தே சூரனை கொன்றே

  5. வெற்றி வாகையே தான் சூடியே
    தேவர் கிளையே செழிக்க காத்தோனே

  6. குறிஞ்சிக் கோனே குறத்திக் கேள்வனே
    தெய்வானை துணைவனே திருவானை இளவலே

  7. அயனின் அரசனே அரனின் ஆசானே
    அரியின் மருகனே அலைமகள் பிரியனே

  8. கலைமகள் படைப்பே தங்கத் தமிழே
    சங்கத் தலையே தோகை மயிலேறியே

  9. விரைந்து வந்தே நடனம் ஆடியே
    தன்கழல் சிலம்பே கிண்கிணி சலங்கையே

  10. ஒருசேர இசைக்கவே ஒலிக்கும் தாளத்தே
    உள்ளம் உருகவே சிந்தையில் அமர்ந்தே

  11. என்றும் அடியார்க்கே அருளன்பு பொழிந்தே
    அவரின் இருவினையே முற்றும் அறுத்தே

  12. புத்தி பத்தியே சத்தி சித்தியே
    முத்தி களிப்பே மிக அளிப்பவனே
            போற்றி போற்றியே போற்றி போற்றியே

            Thursday, August 21, 2025

            படுந்துயராற்ற வேண்டுதல்

            கொத்துக் கொத்துக் கொத்து...

            பழி வாங்கிடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            பகை வென்றிடக் 
            கொத்துக் கொத்துக் கொத்து...

            விடம் ஏற்றிடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            செத்துப் போகக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அனல் தகிக்கக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            ரணம் ஆற்றிடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            சினம் தனிந்திடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            மனம் குளிரக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            தீமை மறக்காமல்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            சூது செய்தாரைக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            தீது இழைத்தோரைக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அரசியல் பிழைத்தோரைக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அறம் கூற்றாகக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அசுர வேகத்தில்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            அச்சமுர அச்சமுரக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            பாவம் தீர்த்திடக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            விடாது தொடர்ந்துக்
            கொத்துக் கொத்துக் கொத்து...

            மனம் வெதும்புகிண்றேன்
            இறைவன் கேட்கவில்லை...
            இயற்கையே வேண்டுகிண்றேன்,
            படுந்துயராற்ற நல்லரவே
            பழிவாங்கு எனக்காக...

            கொத்துக் கொத்துக் கொத்து...

            நெஞ்சம் பொறுக்குதில்லையே
            கொத்துக் கொத்துக் கொத்து...

            Tuesday, June 17, 2025

            வீர தீர சூரா

            வீரா அதி வீரா 
            தீரா அதி தீரா
            சூரா அதி சூரா
            வேகா அதி வேகா
            மோகா அதி மோகா
            தேவா அதி தேவா


            அரனின் இன் குருவே
            பூரணே பரி பூரணனே
            சூரன் தலை கொய்தோனே
            கவின்மிகு பல்கவி நாயகனே
            தேன்தமிழ் மாநில கிழவனே


            அண்டர்படை வெற்றித் தலைவனே
            தேவசேனை மறுகும் கேள்வனே
            குறவஞ்சி இளவள்ளி கள்வனே
            வாசநறு மலரணி மார்பனே
            மின்னுமரிய பலமணி கிரீடனே


            மயில் வாகனனே வேலனே
            மலை மகள் மைந்தனே
            மத யானை இளையோனே
            மா மாயோன் மருகோனே


            நின்சீர் பாதம் பணிவேனே
            பரிவாய் மைந்தன் எனக்கு - அருள்வாயே
            குருவே அருணகிரி நாதனே


            Thursday, May 15, 2025

            அலையும் ஆணே

            முழு நிலவொளியில் நின்
            தளிர் கரம் பற்றிய
            குளிர் இரவு...

            கடற் கரை ஓரம்
            கால்கள் தடம் பதித்து
            தோல்கள் உரசி நடக்க...

            விடுகதை கேட்டாய் ...
            பொங்கும் பால் அலை
            ஆண் பாலா பென் பாலா ?

            ...

            உன் பின் அலையும் 
            நான் மட்டும் அல்ல,
            உன் கால் மட்டும் வருடி
            உன் தடம் மட்டும் திருடி
            உனை மீண்டும் மீண்டும் 
            தீண்டும் அலையும் ஆணே...

            தணிந்த அலை 
            உனது தடத்தை பிரித்தது,
            எனது தடமும் தனித்தே
            ஆனது அனாதை

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

            ...

            மடியில் தலை வைத்து
            பெண் நிலவை ரசித்தேன்
            மலர்ந்த மல்லிகை முகம்
            பொழிந்தது மோகத் தேன்

            சில நேரம் முழு மதியை
            மேக முடி மூடி மறைக்க...
            வேகக் காற்றை வீசி விரைந்து
            தேகத் திரையை விலக்கும்
            கடல் அலையும் ஆணே...

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

            ...

            மடியில் புதைந்த முகத்தை
            முடி திரை போட்டு
            மார்பில் மறைப்பாய்...
            தனத்தில் முத்தமிட்டால்
            வெட்கத்தில் சிரிப்பாய்...

            உன் சிரிப்பலை என் இதயத்தில்
            சிற்றலை எழுப்பும்,
            சீற்றம் கொண்ட கடல்
            பேரலை எழுப்பும்...
            பொறாமையில் பொற்றாமரை 
            மார் மேல் விழுந்து
            (ந)அனைக்கும் அலையும் ஆணே...

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

            ...

            மோகத்தில் மெழுகென நினது கரத்தில்
            உருகி சாய்ந்து விழ வேன்டும்...

            பிரியமான நேரம் இனிதே கடக்கும்...
            பிரியும் நேரம் இதயம் கனக்கும்

            கருத்த கடலும் ஓலம் எழுப்பும்
            அழுதே வடியும் உவர்க்கும் அலையும் ஆணே...

            மோகப் போராட்டம் என்
            உணர்வலைக்கும் கடலலைக்கும் ...

            Wednesday, March 5, 2025

            சேயென வரவேணும் - 2

            குரு அருண கிரி யார் பாட
            குக கமல சீர் பாத மாட 
            மணி சலங்கையு மிசை மீட்ட - வலியதோல்

            அணி கடம்ப பூ மணம் வீச 
            கரிய முகில் குழல் ஆட
            கறு மேகம் வானில் ஒருசேர - அதைக்கண்டு

            அயில் மயில் தோகை விரித்தாட
            கந்த கருணை மழை பொழிந்தாட
            சக்தி வேல் செம்பூ கரத்திலாட - தழுவிஎனது

            சேயென மடி மீதாட வரவேணும் 

            ஊக்கம், உத்வேகம் : 

            https://www.youtube.com/watch?v=1-V45F-nzt8&t=216s 

            https://kaumaram.com/thiru/nnt1053_u.html