Sunday, April 12, 2026

நீ அறிவாயா ?

இரவு பணியில்

மடி கணிணி ஒளியில் 

உன் முகமும் ஒளிர...

முழு மதியும் வான் விட்டு 

அறைக்குள் வந்ததை 

நீ அறிவாயா ?


கரு மேகம் குழலில் 

பஞ்சமி பிறையென சூடிய 

வெண் மல்லிகை வாசத்தில்

என் மோகம் உன் வசத்தில் 

தஞ்சம் புகுந்ததை

நீ அறிவாயா ?


குறுநகை புரிந்து

நீ தலை குனிந்து 

நானத்தில் செந்தேன் சிந்த

நான் அதில் நனைந்தேன் என்று 

நீ அறிவாயா ?


மெல்லிடையாளே,

தரை பட்டும் படாமல் நடக்கையில்

உன் மென் பட்டு தாள் கொலுசுடன்

என் மனமும் மெல்லிசை தாளமிடுவதை

நீ அறிவாயா ?

Saturday, March 14, 2026

திருமலை வேங்கடகிரி சீனிவாசா


நாகாச்சல
வைகுந்தபுரி வேங்கட கிரிவாசா 
கோவிந்தா நமோ நம

திருபதிவாழ் பத்மாவதி மனோஹர சீனிவாசா 
கோவிந்தா நமோ நம

ஏழுமலைசூழ் எழுந்தருள் திருமலைவாசா 
கோவிந்தா நமோ நம

நவநிதியருள் பெருமாள் திருபதிவாசா 
கோவிந்தா நமோ நம

ஆதிமூலம் பூவராஹர் உடனுறை வெங்கடேசா 
கோவிந்தா நமோ நம

திருமகள் நிலமகள் பாதகமலம் நித்யவாசா 
கோவிந்தா நமோ நம

பக்தமனமாழ் நெடுமால்  வேதம்புகழ் கீர்த்திவாசா 
கோவிந்தா நமோ நம

அமரர் சித்தர் ஆழவார் நித்தம் பூசிக்கும் ஈசா 
கோவிந்தா நமோ நம

நித்யானந்தா புருஷோத்தமா அச்சுத்தா அநந்தா 
கோவிந்தா நமோ நம

சிறிய திருவடி பெரிய திருவடி ஆட்கொண்ட நாதா 
கோவிந்தா நமோ நம

Tuesday, March 3, 2026

கிரியே கிளியே

  1. அருண கிரியே அருமை கிளியே
    அமுத மொழியே திருப் புகழே

  2. கருணைக் கடலே கந்த வேலே
    குமர குருவே முருகப் பெருமாளே

  3. சக்தி மகனே ஆறு முகனே
    சேனா பதியே சேவல் கொடியே

  4. அமரர் மீளவே வீரம் சிறந்தே
    சமரம் செய்தே சூரனை கொன்றே

  5. வெற்றி வாகையே தான் சூடியே
    தேவர் கிளையே செழிக்க காத்தோனே

  6. குறிஞ்சிக் கோனே குறத்திக் கேள்வனே
    தெய்வானை துணைவனே திருவானை இளவலே

  7. அயனின் அரசனே அரனின் ஆசானே
    அரியின் மருகனே அலைமகள் பிரியனே

  8. கலைமகள் படைப்பே தங்கத் தமிழே
    சங்கத் தலையே தோகை மயிலேறியே

  9. விரைந்து வந்தே நடனம் ஆடியே
    தன்கழல் சிலம்பே கிண்கிணி சலங்கையே

  10. ஒருசேர இசைக்கவே ஒலிக்கும் தாளத்தே
    உள்ளம் உருகவே சிந்தையில் அமர்ந்தே

  11. என்றும் அடியார்க்கே அருளன்பு பொழிந்தே
    அவரின் இருவினையே முற்றும் அறுத்தே

  12. புத்தி பத்தியே சத்தி சித்தியே
    முத்தி களிப்பே மிக அளிப்பவனே
            போற்றி போற்றியே போற்றி போற்றியே