இரவு பணியில்
மடி கணிணி ஒளியில்
உன் முகமும் ஒளிர...
முழு மதியும் வான் விட்டு
அறைக்குள் வந்ததை
நீ அறிவாயா ?
கரு மேகம் குழலில்
பஞ்சமி பிறையென சூடிய
வெண் மல்லிகை வாசத்தில்
என் மோகம் உன் வசத்தில்
தஞ்சம் புகுந்ததை
நீ அறிவாயா ?
குறுநகை புரிந்து
நீ தலை குனிந்து
நானத்தில் செந்தேன் சிந்த
நான் அதில் நனைந்தேன் என்று
நீ அறிவாயா ?
மெல்லிடையாளே,
தரை பட்டும் படாமல் நடக்கையில்
உன் மென் பட்டு தாள் கொலுசுடன்
என் மனமும் மெல்லிசை தாளமிடுவதை
நீ அறிவாயா ?