அன்று,
காதலிக்காக கட்டிய மணல் கோட்டையை
அலையே, நீ கரைத்தாய்
தோள் சாய்ந்து விம்மினாள் காதலி;
இன்று,
காதல்க்காக கட்டிய மனக்கோட்டையை
அவளே உடைத்தாள்,
கால்த் தொட்டு வருந்துகிறாய் நீ;
மனத்தோடு,
தடம் பதிந்திட்டது அவள் நினைவலைகள்;
நுரை அலையே,
பெருகும் என் கண்ணீர் மணித்துளியை
கரையோரம்,
கைகோர்த்து தடம் பதித்து போன
காதலி கால் சுவடுகளில் சேர்த்துவிடு;
Monday, April 20, 2009
அலை விடு தூது
கரைச் சேரும் கடலலை - நீ
காதலில் மூழ்கி தத்தளிக்கும்
என்னை கரை சேர்ப்பாயா?
வீசும் காற்று உவர்க்கிறது -
உப்பு, கடலலை தந்தில்லை
என் கண்ணீர் தந்தது
கடலோசை எழுப்பும் அலை - நீ
அக்கரையில் அவளிடம் என்
காதல் ஓசையையும் எழுப்பாயோ?
ஓயாமல் ஓங்காரம் எழுப்பும் அலை -
ஏங்கும், என் காதல் ரீங்காரம்
அவள் கேக்கச் செய்வாயோ?
காதலில் மூழ்கி தத்தளிக்கும்
என்னை கரை சேர்ப்பாயா?
வீசும் காற்று உவர்க்கிறது -
உப்பு, கடலலை தந்தில்லை
என் கண்ணீர் தந்தது
கடலோசை எழுப்பும் அலை - நீ
அக்கரையில் அவளிடம் என்
காதல் ஓசையையும் எழுப்பாயோ?
ஓயாமல் ஓங்காரம் எழுப்பும் அலை -
ஏங்கும், என் காதல் ரீங்காரம்
அவள் கேக்கச் செய்வாயோ?
Subscribe to:
Comments (Atom)