பெண்ணே நீ சூனியக்காரி,
என்ன சூனியம் வைத்தாய்?
ஒரு போதைக்கு மறு போதை
மருந்தென அறிந்தவள் நீ
மதுவுக்கு அடிமை பட்டிருந்தவனை
மாது உன்னிடம்,
மயக்கம் கொள்ள செய்தாய்
கள்ளூறும் விழிகள் போதை தருகிறது
உன் அழகில் சொக்கி போயிருக்கிறேன்
போதையில் இருந்தெனை மீட்டாய்
மீண்ட நான்,
மீண்டும் மீள முடியாமல்
உன்னில் மயங்கி கிரங்கி விழத்தானா?
பெண்ணே நீ சூனியக்காரி,
என்ன சூனியம் வைத்தாய்?
Tuesday, September 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment