Saturday, January 25, 2025

சேயேன சேராயோ

மருகா
முருகா என
உருகா எனை -

மறுக்கா தெனை
ஆட் கொள
அருள் செய்

மறவா துனை
பிடி கொள
துணை செய்

பாத கமலம் பற்ற
உனது புகழும் போற்ற
வகை செய்

பிரிவது உயிர்கொள்
பெரியது துயர்கள்
பரிவது துணைகொள்
புரியது உயர்கொள 
அன்பு செய்

வேல் விளையாடி
மயில் நடமாடி
அயில் நகையாடி
சிலம்பு இசைபாடி
கடம்பு வாசம் பரவி 
மயல் தீர கடுகி
எனை குறுகாயோ

அழகா மோகா 
அருளா அன்பா
கருணா நாதா
வேலா வீரதீரா 
குமரா குருபரா
அருணகிரி வாசா
கந்தா சரவணா
குகா சண்முகா
கிருபாகரா கிரிதரா
என் சேயேன
எனை சேராயோ

அருள் வரம் தாராயோ

No comments:

Post a Comment