முழு நிலவொளியில் நின்
தளிர் கரம் பற்றிய
குளிர் இரவு...
கடற் கரை ஓரம்
கால்கள் தடம் பதித்து
தோல்கள் உரசி நடக்க...
விடுகதை கேட்டாய் ...
பொங்கும் பால் அலை
ஆண் பாலா பென் பாலா ?
தளிர் கரம் பற்றிய
குளிர் இரவு...
கடற் கரை ஓரம்
கால்கள் தடம் பதித்து
தோல்கள் உரசி நடக்க...
விடுகதை கேட்டாய் ...
பொங்கும் பால் அலை
ஆண் பாலா பென் பாலா ?
...
உன் பின் அலையும்
நான் மட்டும் அல்ல,
உன் கால் மட்டும் வருடி
உன் தடம் மட்டும் திருடி
உனை மீண்டும் மீண்டும்
தீண்டும் அலையும் ஆணே...
உன் கால் மட்டும் வருடி
உன் தடம் மட்டும் திருடி
உனை மீண்டும் மீண்டும்
தீண்டும் அலையும் ஆணே...
தணிந்த அலை
உனது தடத்தை பிரித்தது,
எனது தடமும் தனித்தே
ஆனது அனாதை
மோகப் போராட்டம் என்
உனது தடத்தை பிரித்தது,
எனது தடமும் தனித்தே
ஆனது அனாதை
மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...
...
மடியில் தலை வைத்து
பெண் நிலவை ரசித்தேன்
மலர்ந்த மல்லிகை முகம்
பொழிந்தது மோகத் தேன்
சில நேரம் முழு மதியை
மேக முடி மூடி மறைக்க...
வேகக் காற்றை வீசி விரைந்து
தேகத் திரையை விலக்கும்
கடல் அலையும் ஆணே...
மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...
...
மடியில் புதைந்த முகத்தை
முடி திரை போட்டு
மார்பில் மறைப்பாய்...
தனத்தில் முத்தமிட்டால்
வெட்கத்தில் சிரிப்பாய்...
உன் சிரிப்பலை என் இதயத்தில்
சிற்றலை எழுப்பும்,
சீற்றம் கொண்ட கடல்
பேரலை எழுப்பும்...
சிற்றலை எழுப்பும்,
சீற்றம் கொண்ட கடல்
பேரலை எழுப்பும்...
பொறாமையில் பொற்றாமரை
மார் மேல் விழுந்து
(ந)அனைக்கும் அலையும் ஆணே...
மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...
...
மோகத்தில் மெழுகென நினது கரத்தில்
உருகி சாய்ந்து விழ வேன்டும்...
பிரியமான நேரம் இனிதே கடக்கும்...
பிரியும் நேரம் இதயம் கனக்கும்
கருத்த கடலும் ஓலம் எழுப்பும்
அழுதே வடியும் உவர்க்கும் அலையும் ஆணே...
மோகப் போராட்டம் என்
உணர்வலைக்கும் கடலலைக்கும் ...
No comments:
Post a Comment