பெண்ணே,
பூ இனம், வண்டினம்
இரண்டிற்கும்
உன் மேல் சினம்
செடி கொடிகளுக்கு கோபம்,
பூக்களுக்கு ஏக்கம்;
கரு வண்டிர்க்கும் சோகம் -
தத்தம் வம்சம் அழிவது
கண்டு, வருத்தம்.
பூக்களுக்கு ஏக்கம்:
கொடியிடையாள்,
காதல் போகி - உல்லாசக் கரு வண்டு,
உன் தேன்பழா செவ்விதழ்
வாடைக்காற்றால் மோகம் கொண்டு,
தினம் உன்
பூ இதழையே மொய்ப்பதால்...
வண்டிர்க்கு சோகம்:
கருவிழியாள்,
சிற்றின்ப சுகி - காமுறும் காதல் வண்டு,
போதை தரும் உன்
மலரிதழ் தேன் உண்டு
மயங்கி, சகி
தன்னைச் சேர கூடு திரும்பாததால்...
உன் அழகில் மூர்ச்சையாகி
தம் வம்சம் விருத்தியாகாமல்
போன பூ, வண்டு இனதிர்க்கு
என் இறங்கலை தெரிவிக்கின்றேன்
Friday, March 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment