Friday, March 20, 2009

இறங்கர்பா

பெண்ணே,
பூ இனம், வண்டினம்
இரண்டிற்கும்
உன் மேல் சினம்

செடி கொடிகளுக்கு கோபம்,
பூக்களுக்கு ஏக்கம்;
கரு வண்டிர்க்கும் சோகம் -
தத்தம் வம்சம் அழிவது
கண்டு, வருத்தம்.

பூக்களுக்கு ஏக்கம்:
கொடியிடையாள்,
காதல் போகி - உல்லாசக் கரு வண்டு,
உன் தேன்பழா செவ்விதழ்
வாடைக்காற்றால் மோகம் கொண்டு,
தினம் உன்
பூ இதழையே மொய்ப்பதால்...

வண்டிர்க்கு சோகம்:
கருவிழியாள்,
சிற்றின்ப சுகி - காமுறும் காதல் வண்டு,
போதை தரும் உன்
மலரிதழ் தேன் உண்டு
மயங்கி, சகி
தன்னைச் சேர கூடு திரும்பாததால்...

உன் அழகில் மூர்ச்சையாகி
தம் வம்சம் விருத்தியாகாமல்
போன பூ, வண்டு இனதிர்க்கு
என் இறங்கலை தெரிவிக்கின்றேன்

No comments:

Post a Comment