Monday, April 20, 2009

அலை விடு தூது

கரைச் சேரும் கடலலை - நீ
காதலில் மூழ்கி தத்தளிக்கும்
என்னை கரை சேர்ப்பாயா?

வீசும் காற்று உவர்க்கிறது -
உப்பு, கடலலை தந்தில்லை
என் கண்ணீர் தந்தது

கடலோசை எழுப்பும் அலை - நீ
அக்கரையில் அவளிடம் என்
காதல் ஓசையையும் எழுப்பாயோ?

ஓயாமல் ஓங்காரம் எழுப்பும் அலை -
ஏங்கும், என் காதல் ரீங்காரம்
அவள் கேக்கச் செய்வாயோ?

No comments:

Post a Comment