Wednesday, February 17, 2010

சொர்க்கத்தில்

முன்னிரவு பொழுதில்,
சன்னல் திறந்து,
மேஜையில்
வெண்பட்டு பரப்பி,
விளக்கு ஏற்றி,
இரு குவளையில்
இளஞ்சூட்டில் தேனீர் வைத்து,
எதிரெதிர் நாற்காலி
ஒன்றில் நான்
மற்றொன்றில் - உன்னிடத்தில்
படர்ந்தது வான் நிலவொளி

நிலவின் மகள்
உனக்காய், உன்னுடன்
பழகிய பேரின்ப
தருணங்கள் நினைந்து
அக மலர்ந்து

காத்திருக்கிறேன்...

நாற்காலியில்
வெண் ஒளி, ஒளிந்து
ஒளிந்து ஒளிர்ந்தது
மேகம் பல
நிலவு மறைத்து போக,
கடிகார முள்ளும்
மெல்ல நகர்ந்தது

காத்திருக்கிறேன்...

சன்னல் வழி
குளிர் காற்று,
தோட்டத்து மலர்
மணம் கொண்டு
இதமாய் வீசியது,
பூ வாசம் மணக்க
குளிரும் மேல் பரவியது

காத்திருக்கிறேன்...

என்னவள் நீ,
என் காதில் உன்
காதல் வாசித்தாய்,
வாசித்த கவிதை
அதை அசை போட அது -
தேங்கிய இதயக்குளத்தில் கல்லெறிந்து
ஏக்க அலைகளை எழுப்பியது

காத்திருக்கிறேன்...

எனை பிரிந்து
சொர்க்கம் சென்றாயே...
என் காதல் தேவதை
உனக்காக நானும்
சொர்க்கத்தில் காத்திருக்கிறேன்,
நின் நினைவென்னும் சொர்கத்திலேயே
சதா காத்திருக்கிறேன்...

சொர்க்கத்தில்
மறுபடியும் உனை சேர...

2 comments: